
என்று அழைக்கப்படும் எம்.கே. தியாகராஜபாகவதர் பற்றிய சிறப்புத் தொகுப்பு...
(வாய்ஸ் ஓவர்)
("வாழ்விலோர் திருநாள்..." பாடல்)

தொலைபேசியை கிராகம்பெல் கண்டுபிடித்தப் பிறகு, பல மைல்களுக்கு அப்பால் உள்ள நண்பர்கள், உறவினர்கள் குரலை கேட்டவுடன் மகிழ்ச்சி கடலில் மனம் தத்தளித்ததுபோல, பேசும் படம் பிறந்தபின், பல சினிமா ரசிகர்களை இந்த கம்பீரக் குரல் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. மூழ்கி எடுத்த முத்தாய் கிடைத்தது எம்.கே.டி.யின் பாடல்.
எம்.கே.டி.... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர். தகர்க்க முடியாத பெயர். தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அப்போதைய மாயவரத்தில், கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியரின் மகனாக 1910-ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்தார் தியாகராஜ பாகவதர். பொற்கொல்லர் குடும்பத்தில் உதித்த இந்த இந்த பொன்மகனின் குடும்பம், சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி திருச்சிக்கு செல்ல நேரிட்டது. சிறுவன் தியாகராஜனுக்கு பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை - பள்ளிப் படிப்பைவிட பாட்டுப் படிப்பது தியாகராஜனுக்கு இனித்தது - யார் பாடினாலும், இசை கச்சேரி எங்கு நடைபெற்றாலும் அங்கு சென்றுவிடும் சிறுவன் தியாகராஜன், அந்தப் பாடல்களை அட்சரம் பிசகாமல் அப்படியே பாடி அனைவரையும் வியக்க வைப்பான்.
கொக்கு வளமான மீனுக்காக காத்திருப்பது போல, தன் குரல் வளத்தை ஊருக்கு பறைச்சாற்றும் உற்சவத்துக்காக காத்திருந்த தியாகராஜருக்கு மேடை நாடகங்கள் பாதை அமைத்துக் கொடுத்தன. பாகவதரின் குரல் வளத்தை அறிந்த திருச்சி ரசிக ரஞ்சன சபா நிறுவனர் நடேசய்யர், தனது நாடகக் குழுவில் தியாகராஜனை சேர்த்துக்கொண்டார். அரிச்சந்திரா நாடகம்தான் முதல் அரங்கேற்றம். லோகிதாசன் பாத்திரமேற்று தனது இசைத் திறமையை வெளிப்படுத்த, கிடைத்த வாய்ப்பை தியாகராஜன் நன்றாக பயன்படுத்திக்கொண்டார். இவரது இசை ஆளுமையால் மயங்கிய மதுரை பொன்னு ஐயங்கார் என்ற வயலின் வித்வான், எந்தக் கட்டணமும் பெறாமல் தியாகராஜனுக்கு கர்நாடக இசையை கற்றுக்கொடுத்தார். கர்நாடக இசையில் கரைகண்ட எம்.கே. தியாகராஜன், 1926-ம் ஆண்டு திருச்சி பொன்மலையில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகன் பாத்திரத்தை ஏற்றார். தியாராஜனோடு பாகவதர் அடைமொழியும் அடைக்கலமானது.
சுப்புலெட்சமி - பாகவதரோடு ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பாகவதர் - சுப்புலெட்சுமி ஜோடி பிரபலமாயிற்று. தமிழகம் தாண்டி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் பாகவதர் புகழ் பரவியது. பாகவதரின் நவீன சாரங்கதாரா படப்பாடல்கள் முதன்முதலாக கிராமோஃபோனில் பதிவு செய்யப்பட்டன.
(பாடல்கள்)(சொப்பன வாழ்வில் (சிவகவி) + உனைக் கண்டு மயங்காத (அசோக்குமார்) + மன்மதலீலை (ஹரிதாஸ்)(ஒவ்வொரு பாடலும் 15 செகன்ட்ஸ் மட்டும்)
1934-ம் ஆண்டு பாகவதர் நடித்த "பவளக்கொடி" வெளியானது. சினிமா உலகம் பாகவதரை அறியத் தொடங்கியது. ரசிகர்களோ பாகவதரை ஆராதிக்கத் தொடங்கினர். ஒரு சிலர், தொட்ட இடம் துலங்கும் என்பார்கள் - பாகவதர் காலடிப்பட்ட சினிமாவின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவரது வெற்றிக்கொடி புகழ் கம்பத்தில் கம்பீரமாக பறந்தது- தொடர்ந்து நவீன சாரங்கதாரா, சிந்தாமணி, சத்தியசீலன், அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகசி, ஹரிதாஸ், ராஜமுக்தி, அமரகவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி என்று பாகவதர் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. இதில் ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளியைக் கடந்து வெற்றிவாகை சூடியது.
(பாடல் - மன்மத லீலையை வென்றார் உண்டோ... + அம்பா மனம் கனிந்துருகி + சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்... இன்னும் சில பாடல்கள்...)(ஒவ்வொரு பாடலும் 15 செகன்ட்ஸ் மட்டும்)
மன்மத லீலையை வென்றார் உண்டோ, சாருகேசி ராகத்தில் அமைந்த பாடல்- சாருகேசியை பிரபலமாக்கியவர் தியாகராஜபாகவதர் என்றால் அது மிகையல்ல என்று பிரபல இசை விமர்சகர் சுப்புடு கொடுத்த சான்றிதழ், பாகவதரின் இசை திறமைக்கு இன்றளவும் சாட்சியாக விளங்குகிறது.
தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.டி.யின் பாடல்கள், ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது- அவரது சிகை அலங்காரம், "பாகவதர் கிராப்" என்று புகழ்பெற்றது- அந்தக்கால இளைஞர்கள் பலர் பாகவதரைத் தழுவி சிகை அலங்காரம் அமைத்துக் கொண்டனர்- பாகவதரின் தாக்கம் அந்தகால சினிமா ரசிகர்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருந்த எம்.கே.டி.யின் சிம்மாசனத்தின் கால்கள் சில காலம் கழித்து ஆட்டம் காண ஆரம்பித்தன. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு எம்.கே.டி. மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே. வாழ்க்கையை பதம் பார்க்கத் தொடங்கியது. வழக்கு விசாரணையின் இறுதியில் தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். எனினும், மறுவிசாரணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், பாகவதர் வாழ்க்கையில் இறங்குமுகம் தொடங்கியது. விடுதலையானபிறகு, வெளிவந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
தங்கத் தட்டில் சாப்பாடு, விருந்தினர்களுக்கு அதே பாணியில் விருந்தோம்பல், பலருக்கும் உதவும் தயாள குணம் என வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் எம்.கே.டி.- ஆனால், பொருளாதாரம் பல நாடுகளையே புரட்டிப்போட்டு விளையாடுவதுபோல எம்.கே.டி.
வாழ்க்கையிலும் தன் ஆட்டத்தைத் தொடங்கி, அவரை ஆட்டம்காண வைத்தது.
பகல் முடிந்து, இரவு தொடங்கும் போது படரும் கறுமை போல, வளமை குடி கொண்டிருந்த பாகவதரின் வாழ்க்கையில், வறுமை வலது காலை எடுத்து வைத்து வந்து அமர்ந்தது.
ஒண்டவந்த வறுமை, பாகவதரிடம் ஒட்டிக்கொண்டிருந்த வளத்தை, உடல்நலத்தை விரட்டியடித்து அவரிடம் முழுமையாக் கைப்பற்றிக் கொண்டது. சிந்தாமணி படத்தில் பாடிய ... ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே, ஊனக்கண் இழந்தால் உலகிற்குறையுமுண்டோ... என்ற பாடல் அவரது வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டியது. தியாகராஜபாகவதரைப் போல யாரும் வாழ்ந்தவரும் இல்லை. வீழ்ந்தவரும் இல்லை.
தனது கம்பீரக் குரலால், தமிழ்ச்சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த தியாகராஜபாகவதரை 1959-ம் ஆண்டு, திரும்பி வர முடியாத இடத்திற்கு மரணம் அழைத்துச் சென்றது. தமிழ் சினிமா பாடல்களின் நான்கரை கட்டை சுருதி, தன் இறுதிப் பயணம் மூலம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது திருச்சி இடுகாட்டில்....
(பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல் - பாடல் போடவும்)
ஜெயா ப்ளஸ் செய்திகளுக்காக லாரன்ஸ் விஜயன்...
http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-5299.html
www.youtube.com/watch?v=2rhfuqaNadg&feature=youtu.be
No comments:
Post a Comment