
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு? படம் - சவாலே சமாளி)
பி.சுசீலா... புலப்பாக்க சுசீலா என்ற நீண்ட பெயரின் சுருக்கமான வடிவம்... இந்தக் கானக்குயிலின் குரல் கேட்டுதான், தமிழிசை ரசிகர்களுக்கு பொழுதுகள் விடிந்தன... 1935-ம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் விஜயநகரத்தில் பிறந்த இந்த இசைக்குயிலின் முதல் அழுகை சத்தம்கூட நிச்சயம் ஏதாவது ஒரு சுரத்தில்தான் சங்கமித்திருக்கும்.
மற்ற பாடகிகளுக்கெல்லாம், தொண்டையில் இருந்து பாடல் 'வர'ப்பெற்றது... ஆனால் சுசீலா பாடும்போது மட்டும் பாடல்கள் 'வரம்' பெற்றன. ஆந்திராவில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையான இசைப் பயிற்சி பெற்ற சுசீலா, சென்னை வானொலியில் 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் தனது பாட்டுப் பரிவர்த்தனையை அரங்கேற்றம் செய்தார். அரங்கேற்றமே அற்புதமாய் அமைய, சுசீலாவின் இசைத்திறமை, அவரை திரையுலகை நோக்கி முன்னேற்ற நடை போட வைத்தது. தெலுங்கு படத்தில் தனது திரையிசைக்கு அகரம் எழுதிய சுசீலா, பின்னாளில் தமிழ்ப் படங்களின் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகியாக மாறினார். பின்னணிப் பாடகிகளின் வரிசையில் முன்னணியில் இருந்தார் பி.சுசீலா. 1955-ம் ஆண்டு வெளிவந்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?' 'உன்னைக் கண்தேடுதே' பாடல்கள் சுசீலாவின் திறமை மீது திரையுலகம் கொண்டிருந்த கேள்விக் குறிகளை ஆச்சரியக்குறிகளாக மாற்றின.

(பாடல்கள் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?' 'உன்னைக் கண்தேடுதே') (ஏதேனும் ஒரு பாடல்) (படம் கணவனே கண்கண்ட தெய்வம்)
தெலுங்குதான் தாய்மொழி... இருப்பினும், அவர் நாக்கில் குளித்து வந்த தமிழ்ப்பாடல்கள், கம்பனின் தமிழுக்கும், திரையுலகக் கம்பனாக விளங்கிய கண்ணதாசனின் தமிழுக்கும் தனி அழகைத் தந்தன. சுசீலாவின் தமிழுக்கு... 'அமுதென்று பேர்'...
(தமிழுக்கு அமுதென்று பேர் - பாடல் (படம் பஞ்சவர்ணக் கிளி))
எத்தனையோ பாடல்கள்... அவை, தமிழோடு புரியாது ஊடல்கள்... உச்சரிப்பிலும், இனிமையிலும் தமிழுக்கு பெருமை சேர்த்ததால், பல பெருமைகள் பி. சுசீலாவை வந்து சேர்ந்தன.
(Breath - என்ன என்ன வார்த்தைகளோ - பாடல்) (படம் - வெண்ணிற ஆடை) (பாடல் - 16 வயதினிலே 17 பிள்ளையம்மா) (படம் - அன்னமிட்ட கை) + (ஒரு ஆலயமாகும் மங்கை மனது - பாடல்) (படம் - சுமதி என் சுந்தரி)
சவாலே சமாளி படத்தில் பாடிய சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு? பாடலுக்கு தேசிய விருது என சுசீலாவின் பாட்டுத் திறமைக்குப் பணிந்து, அவரது வீட்டுக் கதவைத் தட்டின பல விருதுகள்...
விருதுகளுக்கு மகுடமாய் சுசீலாவுக்கு இன்று கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு உட்பட 6 மொழிகளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தனியாகவும், குழுவினருடனும் இணைந்து பாடியுள்ளதால், அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
திரைப்படப் பாட்டு சாம்ராஜ்யத்தில், தமது திறமையால், குரல் வளத்தால் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் பி. சுசீலா. அவரது பாட்டுப் பயணத்தில், பல இனிமையான பலாச்சுளை 'பல்லவி'கள் தந்ததற்காக இந்த கின்னஸ் சாதனை விருது, சந்தோஷ 'சரண'மாக அவரிடம் 'சரண'டைந்திருக்கிறது.
(
பாடல் - ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்) (படம் - தனிப்பிறவி) (பாடல் - எங்கிருந்தோ ஆசைகள்) (படம் - சந்திரோதயம்) + ஒரு நாள் யாரோ.... படம், மேஜர் சந்திரகாந்த்)
இசையால் யாரையும் வசப்படுத்தலாம்... பல பசுமையான பாடல்களைத் தந்து இசையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற பி. சுசீலாவை எத்தனை முறை வேண்டுமானாலும் வாழ்த்தலாம்... பி. சுசீலாவால் கின்னஸ் சாதனை விருது, கீர்த்தி அடைந்துள்ளது.
- லாரன்ஸ் விஜயன்
http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-jayamax-5585.html
https://youtu.be/TKAwt2D948o
No comments:
Post a Comment