
(பாடல் - சிரித்தாள் தங்கப் பதுமை.... படம் : கண்ணன் என் காதலன்)
2. தன் திறமை மேல் அபார நம்பிக்கை வைத்துள்ள இளைஞன் ஒருவன், தன் திறமையை பணமாக்க முயல்கிறான். இந்த உலகம் திறமையை உடனே அங்கீகரித்துவிடுமா என்ன?. ஒவ்வொரு இடத்திலும் அவனை நிராகரிக்கிறது இந்த சமூகம். விரக்தி கலந்த வேதனையோடு, மரத்தடியில் அமர்கிறான். களைப்பில் கண் மூடும் அவனை, கைத்தட்டி எழுப்புகிறாள், பொன்மகள்... பொருள் கோடி தர... சொர்கம் திரைப்படத்திலிருந்து சொக்கவைக்கும் ஒரு பாடல்.
(பாடல் - பொன்மகள் வந்தாள்.... படம் : சொர்கம்)
3. தமிழ் திரைப்படங்களில் கேள்வி-பதில் பாணியில் வந்த பலப்பாடல்கள் வெற்றிப்பாடல்களாய் அமைந்துள்ளன. ஆழமான கேள்விகளும், அதற்கு அறிவு பூர்வமான பதில்களும் அமைந்துள்ள எத்தனையோ பாடல்கள் பிரபலம். ஆனால் கேள்வியும், இதுதான் பதிலென்று உறுதியாக சொல்ல முடியாத நம்மை சிந்திக்கவைக்கிற இந்த பாடல், கவியரசு கண்ணதாசனின் உச்சக்கட்ட கற்பனை வளம். கேள்விகளால் புனையப்பட்ட கவிதை வேள்வி இந்தப் பாடல்.
(பாடல் - கொடியசைந்ததும் காற்று வந்ததா... படம் : பார்த்தால் பசிதீரும்)
4. அந்தஸ்து பார்த்து வருவதா காதல்? உள்ளங்களில் உறவு பிணைப்பில் எழுகிற காதல் தீ, சுயநலத்தை சுட்டெரிக்கிறது. பட்டம் பயின்ற ஒருவன் எந்த தொழிலும் இழிவல்ல என சொந்த காலில் தன் உழைப்பால் வாழ்கிறான். அவனின் நேர்மையான நெஞ்சம், ஏழைகள்பால் இரங்கும் குனம், நாயகியை நாயகன் பக்கம் இழுக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாரத் ரத்னா பெற்றுத் தந்த ரிக்ஷாகாரன் படத்தில் இடம்பெறும் இந்த கனவுப் பாடல், அழகிய தமிழால் நெய்த ஆடை, இரு விழிகளில் ஓடும் காதல் ஓடை.
(பாடல் - அழகிய தமிழ் மகள் இவள்.... படம் : ரிக்ஷாகாரன்)
5. ஏழை-பணக்காரன் என்கிற வர்க்கபேதம், காதலில் விழுந்துவிட்ட ஒரு கரும்புள்ளி, பணம் சம்பாதித்துட்டு வா, தங்கையை மணம் முடிக்கலாம் என்கிறான் அண்ணன். நாயகனோ பட்டிணப்பிரவேசத்தில் பணம் சம்பாதித்து, சமூகத்தில் பெரிய அந்துஸ்துடன் காதலியை கைப்பிடிக்க ஊர் திரும்புகிறான். ரயிலில் வரும் அவனை, கனவு தேவதையாய் வந்து வரவேற்கிறார் நாயகி. ரயிலின் பின்னணியில் ரசனையுடன் வலம்வரும் இந்த பாடல், சித்திரை மாதத்தின் பெளர்ணமி நேரம் போல ஒளிரும். சிலுசிலுவென வீசும் தென்றலைப் போல இதமாகக் குளிரும்.
(பாடல் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்... படம் : ராமன் எத்தனை ராமனடி)
6. I have a Dream... எனக்கு ஒரு கனவு இருக்கிறது, என்றான் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் கண்ணியம் காத்த புரட்சியாளர் மார்டின் லூதர் கிங். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் எழுந்தவனின் பிரகடனம் தான் I have a Dream. எல்லோருக்கும் ஒரு கனவு உண்டு. லட்சங்களை அடைய வேண்டும் என்பது பலரின் கனவு, லட்சியங்களை அடையவேண்டும் என்பது ஒரு சில புரட்சியாளர்களின் கனவு. எட்டயபுரத்து எரிமலை மகாகவி பாரதியும் கனவு கண்டான். அது, நாட்டின் மீது அவன் கொண்ட கரிசனம், அவன் பாடலோ ஒரு தீர்க்கதரிசனம்.
(பாடல் - சிந்துநதியின் இசை... படம் : கை கொடுத்த தெய்வம்)

(பாடல் - விஞ்ஞானத்தை வளர்க்க போரேன்டி... படம் : நல்லதம்பி)
8. "அழகாய் நின்றாடும் மானே" உன் மொழியே சங்கீதம் தானே... கவிஞர். கு.மா.பாலசுப்பரமணியத்தின் இந்த காதல் வர்ணனை கருப்பு வெள்ளை காலத்தின் கம்பீரமான கனவுப் பாடல். கனவின் மாயா உலகத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் ரசனைகளின் கூடல்.
(பாடல் - கனவின் மாயா லோகத்திலே... படம் : அன்னையின் ஆணை)
9. இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரமல்ல!
மழை மேகம் குடியிருக்கும் குளிர் நிலவும் அல்ல!
இங்கும் அங்கும் நீர்பாயும் நீரோடை அல்ல!
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?
வாலியின் வளமான கற்பனையை என்ன சொல்ல? கலை உணர்வை, கற்பனை உளியால் செதுக்கியது இந்தப் பாடல்.
(பாடல் - அழகு தெய்வம் மெல்ல மெல்ல.... படம் : பேசும் தெய்வம்)
10. ஏழை-எளிய மனிதர்களின் காதல் கனவு எளிமையாய்தான் இருக்க வேண்டுமா என்ன? இன்றைய தலைமுறை மறந்துவிட்ட அன்றைய டூரிங் டாக்கிஸில் படம் பார்க்கும் நாயகன், நாயகி, படத்தின் நாயகன், நாயகியாய் மாறுகிறார்கள் கனவில். தேறுகிறார்கள் காதல் தேர்வில்... அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ? உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ? கண்ணதாசனின் பாட்டு வானில் மிதக்கும் இந்த நீலநிறம், கவிதை வானில் வானவில்லின் வர்ணஜாலம்...
(பாடல் - நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்... படம் : என் அண்ணன்)
11. இலக்கியங்கள் மீது கொண்ட பற்றால் எழும் ஒரு இன்ப கனவுதான் இந்த பாடல். காளிதாசனின் சகுந்தலையை கண்முன் கொண்டு நிறுத்தும் தத்ரூபமான இந்தக் காட்சி, புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் பேராற்றல் கொண்ட நடிப்பால் பெருமையடைகிறது. காளிதாசன் காவியம், சகுந்தலையின் ஓவியம்.
(பாடல் - காளிதாச மகாகவி காவியம்... படம் : எங்கிருந்தோ வந்தாள்)
12. அனாதைகளாகிப்போன அண்ணன்-தங்கை இருவர். தனக்கான வாழ்க்கையை தவிர்த்துவிட்டு, தங்கைக்காகவே வாழ்கிறான் அண்ணன். தாயாக, தந்தையாக மாறி, தங்கையை வளர்க்கிறான், தங்கையின் எதிர்காலம் எப்படியெல்லாம் அமையவேண்டும் என கனவு காண்கிறான்.
அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்றுவரை முதல் எடுத்துக்காட்டாய் முன்மொழியப்படும் பாசமலரின், மலர் பாடல் இது.
(பாடல் - மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்... படம் : பாசமலர்)
13. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை சொர்க்கமாக அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்று, பாடல் வடிவில் பவனி வருகிறது.
(பாடல் - வானமெனும் வீதியிலே... படம் : அன்னை வேளாங்கண்ணி)
14. இறந்துபோன மனைவியை மறந்துபோகாது அவளது நினைவுகளுடன் குடும்பம் நடத்துகிறான் கணவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருத்தியை கைப்பிடிக்க நேர்ந்தாலும், அவளோடு வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள முடியாமல் வதைபடுகிறான். கனவில் வரும் மனைவியோ கணவனைத் தேற்றுகிறாள். கைப்பிடித்தவளை கண்கலங்கவிடாமல் காப்பாற்றச் சொல்கிறாள். சோகத்தின் அருமையையும், சொந்தத்தின் பெருமையையும் பேசும், கற்பகம் படத்தின் இந்தக் கனவுப் பாடல், காலம் கடந்து பேசும்...
(பாடல் - மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா... : கற்பகம்)
15. காதலனின் மனதில் குடியிருப்பது நானா? அல்லது வேறொருத்தியா? என மனம் வெதும்புகிறாள் காதலி. குழம்பிய மனதோடு வரும் இந்த கனவுப்பாடல் தெளிவான தமிழில் வருகிறது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் உன்னைப்போல் ஒரு பெண் கிடைப்பாளா? குழம்பிய பெண் மனதிற்கு உறுதியான பதில் தருகிறான் நாயகன், இந்த பாடல் வடிவில்...
(பாடல் - நித்தம்நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம்... : நூற்றுக்கு நூறு)
16. ஏழைகளின் வயிற்றில் அடித்து, பிழைப்பு நடத்தும் கொடியவன் ஒருவன் தீய எண்ணங்களுடன் போதையில் காணும் கனவு இது. இனிய இசையுடன் பயணிக்கு இந்த பாடலில் அழகுதான் ராகம்... ஆசைதான் தாளம்...
(பாடல் - அழகு ஒரு ராகம்... : படகோட்டி)
17. பாடல் ஒன்றின் மூலம் ஒரு திருமணத்தை நடத்திக்காட்ட முடியுமா? பத்திரிகை அடித்து, ஊரைக் கூட்டி, பெண்ணழைப்பு நடத்தி மணமகன் கையில் மணப்பெண்ணை ஒப்படைக்கும் இந்த கல்யாண பாட்டு, ஒரு வித்தியாசமான கனவுப் பாட்டு...
(பாடல் - பூமுடித்தாள் இந்த பூங்குழலி... : நெஞ்சிருக்கும் வரை)
18. எத்தனை ஜென்மம் கடந்தாலும் நாம் இருவரும்தான் கணவன்- மனைவி. அதில் எந்த மாற்றமும் இல்லை என, காலங்கள் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜோடிகளின் கனவுப் பாடல்...
(பாடல் - அழகுக்கும், மலருக்கும் ஜாதியில்லை... : நெஞ்சம் மறப்பதில்லை)
19. பெண்ணை வர்ணிக்காத கவிஞர்களே இல்லை. கலா ரசனையுடன் கொஞ்சும் தமிழில் எத்தனை எத்தனை வர்ணனைகள் இருந்தாலும், பெண்ணை புனிதமாக எண்ணி பூஜிக்கிற இந்தப் பாடல்... பெண்மைக்கு தரும் உச்சகட்ட மதிப்பு, மாண்பு...
(பாடல் - பூஜைக்கு வந்த மலரே வா... : பாத காணிக்கை)
20. சாதாரண சிப்பியில் இருந்து முத்து பிறப்பதைப்போல, சாதாரண கல்லில் இருந்து சிற்பம் கிடைப்பதைப் போல இந்த பாடல். கற்பனைகளின் உச்சகட்ட காவியம்... கலையாக களையான ஓவியம்...
(பாடல் - வெண்ணிலா வானில்... : மன்னிப்பு)
லாரன்ஸ் விஜயன்
No comments:
Post a Comment