ஜெயா செய்திகளில் ஒளிபரப்பான என்னுடைய செய்தித்தொகுப்பு..
முகமது அலி... உலக குத்துச்சண்டைப் போட்டிகளின் முதல் முகவரி... கருப்பினப் போராளிகளின் தனி வரலாறு... கம்பீரத்தின் அழிக்க முடியாத அடையாளச் சின்னம்... குத்துச்சண்டை வீரர்களின் பிரிக்க முடியாத பிதாமகன்... வாழ்க்கை தடத்திலெல்லாம் வரலாற்றை பதிவு செய்துவிட்டு, கடந்த 3-ம் தேதி காலமாகிவிட்ட, காலத்தை வென்ற ஒரு சகாப்தம்...
"The Greatest of all Time" என போற்றப்படும் முகமது அலி, கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், அமெரிக்காவின் Kentucky-யில் உள்ள Louisvilleo என்ற இடத்தில் பிறந்தார். Cassius Marcellus Clay எனும் இயற்பெயர் கொண்ட முகமது அலி, இளமை காலம் தொட்டே குத்துச்சண்டை விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
முறையான பயிற்சிகள் பெற்று முழுத் தகுதி பெற்ற நிலையில், 1960-ம் ஆண்டு, தொழில் முறையிலான குத்துச்சண்டை போட்டிகளில் முதல் முறையாக கலந்துகொண்டார். முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று, குத்துச்சண்டை போட்டிகளின் வரலாற்றில் தனது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்குமாறு பதிவுகளை ஏற்படுத்தினார். 1963-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் நடைபெற்ற 19 போட்டிகளிலும் வெற்றிபெற்றார் முகமது அலி. அந்த ஆண்டில் Doug Jones என்பவருடன் நடைபெற்ற போட்டிதான், முகமது அலியின் வரலாற்றில் கடுமையான போட்டியாக அமைந்தது.
உலகிலேயே தலைசிறந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரராக கருதப்படும் முகமது அலி, 1960-ம் ஆண்டு, ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் லைட் வெயிட் எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 3 முறை தொடர்ந்து ஹெவிவெயிட் வெற்றி வீரராக விளங்கிய முகமது அலி, வெறும் குத்துச்சண்டை வீரராக மட்டுமல்லாமல், சமூக போராளியாகவும் திகழ்ந்தார்.
அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்ததோடு, வியட்நாம் போருக்கு எதிராக விமர்சனம் செய்ததால் முகமது அலி கைது செய்யப்பட்டார். மேலும், குத்துச்சண்டை போட்டிகளுக்காக அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களும் பறிக்கப்பட்டன. அவரது குத்துச்சண்டை உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
வியட்நாம் போரை எதிர்த்து குரல் கொடுத்த ஜாம்பவான் முகமதி அலியை, வியட்நாம் மக்கள், அவரது இறுதி பயணத்தின்போது கண்கள் நனைய, உருக்கமுடன் நினைவு கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு முகமது அலி வியட்நாம் பயணம் மேற்கொண்டபோது, அவரை அந்நாட்டு மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாகவே பார்த்தனர்.
1980-ம் ஆண்டு சென்னை வந்த முகமது அலிக்கு, முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். உற்சாக வரவேற்பு அளித்தார். சரித்திர சாதனை படைத்து, சாமானிய மனிதர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், முகமது அலியும் ஒரே தேதியில், அதாவது ஜனவரி 17-ம் தேதி பிறந்தவர்கள் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற காட்சிப் போட்டியில், முகமது அலி கலந்துகொண்டார். இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னையில் குவிந்தது ஒரு மறக்க முடியாத வரலாறு.
இந்நிலையில், கடந்த 1981-ம் ஆண்டுக்குப் பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முகமது அலி, கடந்த 30 ஆண்டுகளாக நடுக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வந்தார். சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளாலும் அவர் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, Phoenix பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது அலியிடம், அவரை எதிர்த்து போட்டியிட்ட குத்துச்சண்டை வீரர்களைப் போல, மருத்துவ சிகிச்சைகளும் தோற்றுப் போயின. கடந்த 3-ம் தேதி குத்துச்சண்டை விளையாட்டின் சகாப்தம் கண்களை மூடிக்கொண்டது. அவருடைய இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான Louisville-ல் இன்று நடைபெற்றது. துருக்கி அதிபர் மற்றும் உலகம் முழுவதிலிமிருந்து திரண்ட லட்சக்கணக்கான குத்துச்சண்டை ரசிகர்கள் இதில் கலந்துகொண்டு, தங்களது கனவு நாயகனுக்கு கண்ணீருடன் விடையளித்தனர்.
பலர் வரலாற்றை படிக்கிறார்கள்... ஒரு சிலர்தான் வரலாற்றை படைக்கிறார்கள்... ஆனால், வெகு சிலர்தான் வரலாறாகவே வாழ்கிறார்கள்... முகமது அலி வெகு சிலரில் ஒருவர்...
தொகுப்பு: லாரன்ஸ் விஜயன்

"The Greatest of all Time" என போற்றப்படும் முகமது அலி, கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், அமெரிக்காவின் Kentucky-யில் உள்ள Louisvilleo என்ற இடத்தில் பிறந்தார். Cassius Marcellus Clay எனும் இயற்பெயர் கொண்ட முகமது அலி, இளமை காலம் தொட்டே குத்துச்சண்டை விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
முறையான பயிற்சிகள் பெற்று முழுத் தகுதி பெற்ற நிலையில், 1960-ம் ஆண்டு, தொழில் முறையிலான குத்துச்சண்டை போட்டிகளில் முதல் முறையாக கலந்துகொண்டார். முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று, குத்துச்சண்டை போட்டிகளின் வரலாற்றில் தனது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்குமாறு பதிவுகளை ஏற்படுத்தினார். 1963-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் நடைபெற்ற 19 போட்டிகளிலும் வெற்றிபெற்றார் முகமது அலி. அந்த ஆண்டில் Doug Jones என்பவருடன் நடைபெற்ற போட்டிதான், முகமது அலியின் வரலாற்றில் கடுமையான போட்டியாக அமைந்தது.
உலகிலேயே தலைசிறந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரராக கருதப்படும் முகமது அலி, 1960-ம் ஆண்டு, ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் லைட் வெயிட் எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 3 முறை தொடர்ந்து ஹெவிவெயிட் வெற்றி வீரராக விளங்கிய முகமது அலி, வெறும் குத்துச்சண்டை வீரராக மட்டுமல்லாமல், சமூக போராளியாகவும் திகழ்ந்தார்.
அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்ததோடு, வியட்நாம் போருக்கு எதிராக விமர்சனம் செய்ததால் முகமது அலி கைது செய்யப்பட்டார். மேலும், குத்துச்சண்டை போட்டிகளுக்காக அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களும் பறிக்கப்பட்டன. அவரது குத்துச்சண்டை உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
வியட்நாம் போரை எதிர்த்து குரல் கொடுத்த ஜாம்பவான் முகமதி அலியை, வியட்நாம் மக்கள், அவரது இறுதி பயணத்தின்போது கண்கள் நனைய, உருக்கமுடன் நினைவு கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு முகமது அலி வியட்நாம் பயணம் மேற்கொண்டபோது, அவரை அந்நாட்டு மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாகவே பார்த்தனர்.
1980-ம் ஆண்டு சென்னை வந்த முகமது அலிக்கு, முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். உற்சாக வரவேற்பு அளித்தார். சரித்திர சாதனை படைத்து, சாமானிய மனிதர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், முகமது அலியும் ஒரே தேதியில், அதாவது ஜனவரி 17-ம் தேதி பிறந்தவர்கள் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற காட்சிப் போட்டியில், முகமது அலி கலந்துகொண்டார். இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னையில் குவிந்தது ஒரு மறக்க முடியாத வரலாறு.
இந்நிலையில், கடந்த 1981-ம் ஆண்டுக்குப் பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முகமது அலி, கடந்த 30 ஆண்டுகளாக நடுக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வந்தார். சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளாலும் அவர் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, Phoenix பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது அலியிடம், அவரை எதிர்த்து போட்டியிட்ட குத்துச்சண்டை வீரர்களைப் போல, மருத்துவ சிகிச்சைகளும் தோற்றுப் போயின. கடந்த 3-ம் தேதி குத்துச்சண்டை விளையாட்டின் சகாப்தம் கண்களை மூடிக்கொண்டது. அவருடைய இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான Louisville-ல் இன்று நடைபெற்றது. துருக்கி அதிபர் மற்றும் உலகம் முழுவதிலிமிருந்து திரண்ட லட்சக்கணக்கான குத்துச்சண்டை ரசிகர்கள் இதில் கலந்துகொண்டு, தங்களது கனவு நாயகனுக்கு கண்ணீருடன் விடையளித்தனர்.
பலர் வரலாற்றை படிக்கிறார்கள்... ஒரு சிலர்தான் வரலாற்றை படைக்கிறார்கள்... ஆனால், வெகு சிலர்தான் வரலாறாகவே வாழ்கிறார்கள்... முகமது அலி வெகு சிலரில் ஒருவர்...
தொகுப்பு: லாரன்ஸ் விஜயன்
No comments:
Post a Comment